மர்ம உறுப்பு மயிரில் பேன்களா?


இந்த பேன்கள் முக்கியமாக உடலுறவு வழியாகத் தான் தொற்றிக் கொள்கின்றன. இவற்றில் மூன்று வகை உண்டு. முதிர்பேன் (Adult ) இளம்பேன் (nymph) மற்றும் ஈர் (nits). முதிர்ந்த பெண் பேன், ஈர் அல்லது முட்டைகளை பாலுறுப்பில் உள்ள மயிரிலோ அல்லது தோலிலோ இட்டுவிடும். இந்த முட்டைகள் 7-14 நாட்களுக்குள் இளம்பேனாக அவதரித்து விடும். பேன்கள் மனித ரத்தத்தை உறிஞ்சியே உயிர் வாழும். இது தவிர, மனித உடம்பின் வெப்பம் மற்றும் சொரசொரப்பான தோல் பகுதியில் தான் இவை உயிர் வாழ முடியும். இவை தலை முடியில் வாழாது.

இது பரவும் முறை:

* இது பெரும்பாலும் பாலுறுப்புப்பேன் உள்ள ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ உடலுறவு கொள்வதால் தான் தொற்றிக் கொள்கிறது.

* இந்தப் பேன்கள் உள்ளவர்களுடன் உங்கள் உடைகள், டவல், போன்றவற்றை பகிர்ந்து கொள்வது.

* இந்தப் பாதிப்பு உள்ளவர்களின் படுக்கையில் தூங்குவது.

* இந்த வகைப் பேன்கள் நாய், பூனை போன்ற மிருகங்களின் உடம்பில் வாழாது, அதனால் மிருகம் மூலமாக இது பரவ வாய்ப்பு இல்லை.

* மற்றவர்களின் வேர்வை, அல்லது நெருங்கி பழகுவதாலும் உங்களுக்கு தொற்றிக் கொள்ளக் கூடும். நீங்கள் மிகவும் அசுத்தமான இடங்களில் வசித்தால் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படலாம்.

பாதிப்புகள்:
                        இந்தப் பேன்கள் ரத்தம் குடிப்பது, மற்றும் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு எந்த நோயையும் தராது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மூன்றில் ஒரு பங்கு இந்த பேனுள்ள மக்களுக்கு, மற்றொரு பால்வினை நோயாலும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இதனால் உங்களுக்கு இந்த பேன்கள் இருந்தால் மற்ற பால்வினை நோய்கள் இருக்க அதிகமான வாய்ப்பு உள்ளது. இதே போல ஒரு சிறுவனோ சிறுமிக்கோ இந்த வகைப் பேன்கள் தாக்கி இருந்தால் அவர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு (பலாத்காரம்) உட்படுத்தப் பட்டிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் இது போல இல்லாவிட்டாலும், இதற்கான வாய்ப்பு உள்ளதால், அந்த சிறுவன்/சிறுமியை தீர விசாரிப்பது நல்லது.

நிவாரணம்:

  • முதலில் உங்களைத் தொற்றி இருப்பது இந்த வகைப் பேன்கள் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.நல்ல வெளிச்சமும், ஒரு கண்ணாடியையும் வைத்து, ஒரு பேனை பிடுங்கி, உற்று கவனியுங்கள். அது கிட்டதட்ட ஒரு சின்ன நண்டு போலவே இருக்கும்.

  • நீங்கள் மருத்துவரை அணுக வேண்டுமா என்று யோசியுங்கள். மருத்துவர் உதவி இல்லாமல் நீங்கள் இந்த பேன் தொல்லையில் இருந்து விடுபட முடியும் என்றாலும், உங்களுக்கு வேறு பால்வினை நோய் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மருத்துவரை அணுக முடிவு செய்தால், நீங்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.
  • நீங்கள் மருந்துக் கடைக்கு சென்று Permethrin 1% pyrethrins சேர்ந்த லோஷன் வாங்கிக் கொள்ளுங்கள். இது கிடைக்காவிட்டால், சாதாரண லோஷனாவது வாங்கிக் கொள்ளுங்கள்.
  • இந்த பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்: கண்ணாடி, ரேசர் அல்லது முடி நீக்கும் கிரீம், நல்ல சீப்பு, நிறைய தண்ணீர், சோப்பு, நீங்கள் வாங்கி வந்த ஷாம்பு மற்றும் டவல்.
  • முதலில் உங்கள் உறுப்பில் உள்ள முடிகளை ரேசரை வைத்தோ அல்லது கிரீமை வைத்தோ முற்றுமாக நீக்கி விடுங்கள். முக்கியமாக உங்கள் ஆசன வாய்க்கு (குண்டி) அருகே உள்ள முடிகளையும் கவனமாக நீக்குங்கள். உங்கள் அக்குள், வயிறு போன்ற இடங்களில் இந்த பேன்கள் இருப்பதாக சந்தேகித்தால், அவற்றையும் நீக்கி விடுங்கள்.
  • இப்போது நீங்கள் வழித்த ரோமத்தை கவனமாக தண்ணீரில் போட்டு ப்ளஷ் செய்து விடுங்கள். இது போல செய்யாவிட்டால், இந்த பேன்கள் மற்றவர்களையோ அல்லது உங்களையோ திரும்ப அணுக வாய்ப்பு உண்டு.
  • உங்கள் உறுப்புப் பகுதியை நீங்கள் (சுடு) நீரில் அரை மணி நேரம் முக்கி வையுங்கள். உங்கள் வீட்டில் பாத் டப் இல்லையென்றால் ஒரு பெரிய வாளியை உபயோகப் படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம், கிட்ட தட்ட எல்லா ஈர்களையும் நீங்கள் ஒழித்து விடலாம்.
  • இப்போது நீங்கள் வெளியே வந்து, நன்றாகத் துவட்டிக் கொண்டு, கண்ணாடி மற்றும் வெளிச்சத்துடன் இன்னும் பேனோ அல்லது ஈரோ தோலோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அவற்றை பிடுங்கி எறியுங்கள்.
  • இப்போது லோஷனை தடவிக் கொள்ளுங்கள்.
  • உங்கள் படுக்கைத் துணிகள், மற்றும் தலையணை உறை ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு, புதிதாக அவற்றை வாங்கி உபயோகப் படுத்துங்கள். குறைந்தபட்சம், அவற்றை வெந்நீரில் துவைத்து, பின் உபயோகப் படுத்துங்கள்.
  • இப்போதைக்கு நீங்கள் இந்தப் பேன்களை ஒழித்து விட்டீர்கள். ஆனால் இரண்டு வாரங்களுக்கு, தினமும் உங்கள் உறுப்பை நீங்கள் உற்றுக் கவனியுங்கள், ஏனெனில் ஒரே ஒரு பேன் உயிரோடு இருந்தால் கூட, அது தினமும் ஆறு முட்டைகளை இட்டு, பன்மடங்காக பெருகி விடும்.
  • இரண்டு வாரங்களுக்கு யாரோடும் உடலுறவு கொள்ளாதீர்கள். இதனால் மற்றவர்களுக்கு இதைப் பரப்புவதை தவிர்க்கலாம்.