“செக்சோம்னியா” வினோதமான செக்ஸ் நோய்?!


உறங்கும்போது தம்மையறியாமல்/தன்னிச்சையாக ஏற்படும் செக்ஸ் உணர்வால் தொடங்கும்/கொள்ளும் உடலுறவையே செக்சோம்னியா என்கிறார்கள் மருத்துவ உலகில். அதாவது, உறக்கக் குறைபாடுள்ளவர்களுக்கு ஏற்படும் ஒருவித குறைபாடு. இத்தகைய நோயாளிகளுள் சுமார் 7.6% செக்சோம்னியா குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது சமீபத்திய இந்த ஆய்வு!

இக்குறைபாடு ஆண்களுள் 11% மற்றும் பெண்களுள் 4% என்றும், இத்தகைய உடலுறவில் ஈடுபடுகிறவர்களுக்கு, உறவில் ஈடுபட்டு துணை சொல்லும்வரை உறவுவைத்துக்கொண்ட நினைவே இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது! உறக்கக் குறைபாடுள்ள சுமார் 832 பேர் கலந்துகொண்ட ஆய்வு சொல்லும் முடிவு பொதுமக்களுக்கு (ஆரோக்கியமானவர்கள்) இல்லை என்பதை நினைவில் கொள்க என்கிறார் டொரோன்டோவின் சுகாதாரப் பல்கலைக்கழக ஆய்வாளர் ஷேரான் ஏ சங்! (Sharon A. Chung in the department of psychiatry at the University Health Network in Toronto, Canada)

இம்முடிவில் முன்வைக்கப்படும் அதிகபட்ச (8 %) என்பது உறக்கக் குறைபாடுள்ளவர்களுக்கே! ஆனால், பொதுமக்களுக்களை இக்குறைபாடு குறைந்த எண்ணிக்கையிலேயே பாதிக்கக்கூடும் என்கிறார் ஷேரான்! இக்குறைபாடுள்ள நோயாளிகள் உறக்க குறைபாடுகளின் மற்ற தொந்தரவுகளிலிருந்தும் தப்புவதில்லையாம். உதாரணத்துக்கு, மன உளைச்சல், உடல் அசதி மற்றும் உறக்கமின்மை போன்றவற்றை சொல்லலாம்!


செக்சோம்னியாவின் பின்னனி?!

இவ்வினோதமான குறைபாட்டுக்குக்கான அறிவியல்பூர்வமான காரணம் என்னவாக இருக்கும் என்று சோதித்ததில், 15.9 % செக்சோம்னியா நோயாளிகள் போதைப்பழக்கம் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது! மேலும், செக்சோம்னியா நோயாளிகள், தங்களின் இவ்வினோதமான செக்ஸ் அனுபவத்தை மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்ள கூச்சப்பட்டு, மறைத்துவிடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது!

பொதுவாக குழப்பமான நிலையிலுள்ளபோதும், தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கத்தில் நடக்கும்போதும் இக்குறைபாடு ஏற்படுகிறது என்று கூறுகிறார் ஷேரான்! பாராசோம்னியா வகையினுள் அடங்கும் செக்சோம்னியா, தூங்கத்தொடங்கும்போது, தூங்கும்போது அல்லது விழிப்பதற்க்கு சற்றுமுன் என பலவேறு கால நிலைகளில் ஏற்படுகிறது என்கிறது ஷேரானின் இந்த ஆய்வு!