குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவுகள் : சில தவறான நம்பிக்கைகள்

நம்பிக்கை
குழந்தைகளை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவது பெரும்பாலும் நமக்குத் தெரியாத நபர்களே ! நமது உறவினர்களும், நண்பர்களும், பக்கத்து வீட்டாருமே??
உண்மை
90 விழுக்காடு தொந்தரவுகளும் தெரிந்த நபர்களாலேயே வருகின்றன !

நம்பிக்கை
எனது குழந்தைகளிடம் ஏற்கனவே இதைப் பற்றி விளக்கிவிட்டேன், எனவே அவர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏதும் இருக்காது.
உண்மை
குழந்தைகளுக்கு அடிக்கடி இதைக் குறித்து உரையாடுங்கள். குழந்தை எச்சரிக்கையாய் இருந்தாலும் பலவந்தமாகவோ, ஏமாற்றியோ யாரேனும் அவர்களை தொந்தரவு செய்து விட முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

நம்பிக்கை
எனது குழந்தையுடன் எனக்கு மிக நல்ல நட்புறவு உண்டு. என்ன பாலியல் தொந்தரவு நடந்தாலும் குழந்தை என்னிடம் உடனடியாக சொல்லிவிடும்.
உண்மை
குழந்தைகள் பெற்றோருடன் எத்தனை சகஜமான நட்புறவு கொண்டிருந்தாலும் பாலியல் தொந்தரவுகளை சகஜமாகப் பகிர்ந்து கொள்வதில்லை. எனவே தொடர்ச்சியான கவனிப்பும், பராமரிப்பும், பகிர்தலும் அவசியம்.

நம்பிக்கை
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நகரங்களில் மட்டுமே உண்டு.
உண்மை
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை கிராமம், நகர்ப்புறம் என எல்லா இடங்களிலும் உண்டு என்பதே உண்மை.

நம்பிக்கை
திருமணமான அல்லது நடுவயது தாண்டியவர்கள் மட்டுமே இந்த பாலியல் தொந்தரவு செய்யும் பட்டியலில் வருவார்கள்.
உண்மை
இளவயது வாலிபர்கள் கூட பாலியல் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள்.

நம்பிக்கை
ஏழை குடும்பங்களில் மட்டுமே பாலியல் தொந்தரவுகள் இருக்கும்.
உண்மை
ஏழை பணக்காரர் எனும் பாகுபாடு இன்றி பாலியல் தொந்தரவுகள் இருக்கும்.

நம்பிக்கை
மனநோயாளிகள் தான் குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுவார்கள்.
உண்மை
நல்ல மனநலம், உடல் நலம் உடையவர்களே பெரும்பாலும் இத்தகைய வன் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நம்பிக்கை
குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த செயல்களையெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக் கொடுக்கின்றனர். எனவே இனிமேல் தனியே நான் எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை.
உண்மை
குழந்தைகளுக்கு இத்தகைய சிக்கல்களைக் குறித்து விளக்கும் பெரிய பொறுப்பு அன்னைக்கு உண்டு. தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் குழந்தைகளிடம் அனைத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டியது அன்னையரின் கடமையாகும்.

நம்பிக்கை
சிறு சிறு பாலியல் தொந்தரவுகள் ஆபத்தற்றவை.
உண்மை
சிறு சிறு தொந்தரவுகள் குழந்தையின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும். அவர்களுடைய மனதிலும், உடலிலும், சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

நம்பிக்கை
பாலியல் தொந்தரவுகள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே.
உண்மை
மிக மிகத் தவறு. 6 சிறுவர்களில் ஒரு சிறுவன் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறான் என்கிறது உலக நலவாழ்வு நிறுவன அறிக்கை.

நம்பிக்கை
அவர் ரொம்ப நல்லவர், அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார், அல்லது தெரியாமல் தவறிழைத்திருப்பார். இனிமேல் நிச்சயம் நடக்காது. பழையவற்றை மனதில் வைத்திருக்கத் தேவையில்லை.
உண்மை
பாலியல் தொந்தரவு செய்பவர்கள் ஒருமுறையுடன் நிறுத்துவதில்லை. அவர்களுடைய சிந்தனை முழுக்க முழுக்க அதைச் சார்ந்தே இருக்கும். அதற்காகவே நல்லவர்களாய் நடமாடுபவர்கள் தான் அதிகம். எச்சரிக்கை அவசியம் !

நம்பிக்கை
குழந்தைகளிடம் இதையெல்லாம் பேசாமல் இருப்பதே நல்லது.
உண்மை
குழந்தைகளிடம் மிக விரிவாக, தெளிவாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் விதமாக இவற்றைப் பேசுவது மிகவும அவசியம்.