"கல்யாணமான புதுசுல தேன் தடவின மாதிரி இனிக்க, இனிக்க எப்படிப் பேசுவாரு. இப்ப எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறாரு. அதுக்குள்ள நான் அலுத்துப் போயிட்டேன் போலருக்கு" என்று அலுப்பா? இதையெல்லாம் பின்பற்றிப் பாருங்களேன்.பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பியுங்கள்.
உங்களுடன் வண்டியில் போகும் போது உங்களுக்குத் தெரிந்தே மற்ற பெண்களை சைட் அடிக்கிறாரா? உங்களுக்குத் தெரியாமல் தனது வண்டியில் பெண்களுக்கு லிஃப்ட் தருகிறாரா? அதை யெல்லாம் பெரிது படுத்தாதீர்கள். மன்னித்து, மறந்து விடுங்கள்.ஏதேனும் முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்கிறீர்களா? பேச்சு சண்டையில் முடியும் போலத் தெரிகிறதா? சட்டென்று பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது வேறு விஷயத்திற்குத் தாவி விடுங்கள்.
அவரைப் பார்த்துப் பொறாமைப்படுங்கள். அது ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும். பைசா பெறாத விஷயத்திற்குக் கூடத்தானே முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பவரா? போகட்டும், விட்டு விடுங்கள். அந்த முடிவு பாதக விளைவுகளைத் தரும் போது நாசுக்காய் சுட்டிக் காட்டுங்கள். உங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவற்றை யெல்லாம் பெட்ரூமுக்கு உள்ளே வர அனுமதிக்காதீர்கள். உங்கள் உடல், மன நிலைக்கேற்ப அடிக்கடி செக்ஸ் உறவில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
அம்மாவை நேசியுங்கள். உங்கள் அம்மாவை இல்லை. அவரது அம்மாவை. கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள். பிறகென்ன, மனிதர் உங்களைத் தலையில் வைத்துக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்.போனால் போன இடம், வந்தால் வந்த இடம் என்று இருப்பவரா உங்களவர்? உங்களை எங்கேயாவது அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தவறி விடுகிறாரா? ஆளைப்பார்த்தும் ஆத்திரமாகக் கத்தாதீர்கள். ஏமாற்றத்தை வார்த்தைகளிலோ, முகத்திலோ காட்டிக் கொள்ளாதீர்கள். அவரது செயல் உங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்கிற படி உங்கள் நடவடிக்கை இருக்கட்டும். மனிதர் தானாக வழிக்கு வருவார். அடுத்த முறை அதே தவறைச் செய்யத் தயங்குவார்.
அவரது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் நன்றாகப் பேசிப் பழகுங்கள். யார் மீதாவது உங்களுக்கு வெறுப்பு இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்.உங்களவருக்கு நெருங்கிய நண்பர்களாவோ, உறவினர்களாகவோ இருந்தாலும் கூட மூன்றாம் நபருக்கு எதிரில் அவரை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள்.
எக்காரணம் கொண்டும் உங்களவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இந்த விஷயத்தில் பெரும்பாலான ஆண்களுக்குப் பரந்த மனப்பான்மை கிடையாது.கணவன்-மனைவிக்குள் சண்டைகளே இருக்கக் கூடாது என்று நினைக்காதீர்கள். அப்படி சண்டைகளே இல்லாமல் வாழ்வதாகச் சொல்பவர்களையும் நம்பாதீர்கள்.
சின்னச்சின்ன சண்டைகள் இல்லாத தாம்பத் தியத்தில் சுவாரசியம் இருக்காது.