சுயஇன்பம்

மாறி சுயஇன்பம் கொள்ளுதல்


ஆண் சுயஇன்பம்

 பெண்ணின் சுயஇன்பம்

 ஆணோ, பெண்ணோ தன்னுடைய பிறப்புறுப்பினை வலுக்கட்டாயமாக தூண்டிவிட்டு இன்பம் அனுபவி்ப்பதே சுய இன்பம். இந்த செயலின் மூலம் புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதே நோக்கமாகும். சுயமாக தனக்குதானே பிறப்புறுப்பினை தூண்டிவிட்டுக்கொள்ளுதலையும், பிறருக்கு செய்வதையும் இதோடு இணைத்துவிடலாம். ஆங்கிலத்தில் Masturbation என இது அழைக்கப்படுகிறது.

இதற்கு கைமுட்டி, கைப்பழக்கம், கையடித்தல் என பல்வேறான பெயர்கள் இருக்கின்றன. இந்த வார்த்தைகள் ஆண்களின் சுயஇன்பத்தினைக் குறிப்பதாக உள்ளது. பெண்களின் சுயஇன்பத்தினைக் குறிக்க, கைப்போடுதல் என்று கிராமத்தில் சொல்வார்கள்.

எல்லோரும் நினைக்கிற மாதிரி சுயஇன்பம் அனுபவிப்பது, தப்பான விஷயம் இல்லை. அது ஒரு நோயும் இல்லை. ஆனால் இதைச் சொன்னால் ஏற்றுக்கொள்கின்றவர்கள் குறைவு.
- டாக்டர் நாராயணரெட்டி – உயிர் புத்தகத்தில்.

இதை இந்து மதம் தவிற மற்ற எல்லா மதங்களும் மறுக்கின்றன. ஏன் இந்து மதம் மறுக்கவில்லையா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. (இந்து மத குருமார்கள் வேண்டுமானால் மறுக்கலாம்). முனிவரின் சிந்தியிருந்த விந்தினை கிளி உண்டு கிளிக்கு பிள்ளை பிறந்தமையை சுகர் பிரமம் கதை விவரிக்கிறது. சகோதரனில் சுகர் பிரம்மம் – ஒரு வினேத உயிர் என்ற இடுகை கூட வெளியிடப்பட்டுள்ளது.

சுயஇன்பத்தினை முழுவதுமாக ஆதரிக்கிறது எகிப்திய மதம். பழங்கால எகிப்திய கடவுள் ஆடாம்.இவர் சுயம்புவாக உருவானவர்.உலகமே வெற்றிடமாக இருந்த சமயம்.அன்னு என்ற நகரில் நின்றுகொண்டு இவர் சுயஇன்பம் அனுபவித்தார்.

அவருடைய ஆண்குறியிலிருந்து வெளியான விந்தணு உலகம் முழுக்க பரவியது. இதிலிருந்து முதலில் ஷூ மற்றும் டெஃப்நட் என்னும் இரண்டு கடவுள்கள் தோன்றினர்கள். பிறகு அவர்கள் இருவரும் இணைந்து உயிர்களைப் படைத்தார்கள் என்கிறது எகிப்திய புராணம்.