ஆரோக்கியமாக இருங்கள்
முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும்.நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா,எடை,ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.சரியான விதத்தில் சாப்பிடுங்கள்
மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும்,சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள்,பச்சைக் காய்கறிகள்,முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம்.கால்சியம்,இரும்பு சத்துகளும்,வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.தீய பழக்கங்கள் கூடாது
புகைத்தல்,மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது.அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன்,கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி,மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச்செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறதுசரியான நேரம்
ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும்.பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம்.பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது.அவற்றில் ஒன்றுதான்,உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு.அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ,கிரீம் போலவோ இருக்கலாம்.கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.பாலியல் அறிவு அவசியம்
படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும்,ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும்.உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும்.உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்
கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி,உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும்.குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம்.உடல்ரீதியாகவும்,உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும்.