
சைவ உணவிலும் சமைத்த உணவுகள், சமைக்காத உணவும் என இரு வகைகள் உள்ளன. இதில் நம்முடைய உணவு என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
1. நிலக்கீழ் உணவுகள்
நிலத்திற்கு கீழ் விளையும் கிழங்கு வகைகள் எலி, பன்றி போன்ற கீழ்வகை விலங்குகளுக்கானவை. பூண்டு, வெங்காயம் மற்றும் ஏனைய கிழங்கு வகைகளும் இதில் அடங்கும். இத்தகைய விலங்குகளின் மூக்கு அதற்கேற்ற தன்மையில் அமைந்துள்ளதை காணலாம்.
2. நிலமேல் உணவுகள்
நிலத்திற்கு மேல் விளையும் செடி வகைகள் ஆடு, மாடு மற்றும் குதிரை போன்ற மேயும் தன்மை கொண்ட விலங்குகளுக்கானவை. அவற்றின் ஜீரண மண்டலம் உணவை அசை போட்டு உண்ணுவதற்கேற்ப அமைந்துள்ளது. அரிசி, பருப்பு போன்ற
3.தானிய உணவுகள்
அரிசி, பருப்பு, சோளம் போன்ற தானிய உணவுகள் பறவைகளுக்கானவை. அவற்றின் மூக்கு மற்றும் வாய் தானியங்களை கொத்தி உண்பதற்கேற்ப அமைந்துள்ளதைக் காணலாம்.
4. பழங்கள் மற்றும் கொட்டை பருப்புகள் (Fruits and nuts)
மனிதர்களின் கையும் முகவாய் அமைப்புகள் பழங்கள் மற்றும் கொட்டை பருப்புகள் (Fruits and nuts) உண்பதற்கேற்ப அமைந்துள்ளதை காணலாம். அதுவும் தென்னை, பனை, வாழை, பப்பாளி போன்ற மரங்கள் புவியீர்ப்பு விசையை எதிர்த்து ஒரே கிளையாக மேல் நோக்கி வளர்வதால் அவற்றில் கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கு உயிராற்றல் மிகவும் அதிகம். அதன்பிறகு வருவன பல கிளைகளுடன் கூடிய மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள். மனிதனின் உணவு, இந்த வகை உணவுகளே.
உணவுகளின் வகைகள்
1. ஒரு கிளை மரங்கள்: தென்னை, பனை, வாழை, பப்பாளி.
2. பல கிளை மரங்கள்: மா, பலா, சப்போட்டா போன்றன
3. செடிகள் கொடிகள்: திராட்சை, மாதுளை போன்றன
4. காய் வகைகள்: புடல், பீர்க்கன், பாகல், முருங்கை
5. புவி கீழ் உணவுகள்: சேனை, உருளை, பீட்ரூட், முள்ளங்கி போன்ற பூமிக்கடியில் விளையும் கிழங்குகள்
6. பால் பொருட்கள், முட்டை
7. வெள்ளிறைச்சி-(White Meat)- மீன் வகைகள்
8. செவ்விறைச்சி-(Red Meat): ஆடு, மாடு, பன்றி கோழி போன்ற இறைச்சி வகைகள்.
இதில் நாம் எந்த நிலையில் உள்ள உணவுகளை உண்ணுகிறோமோ அதற்கேற்பவே நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் இருக்கும்.
தவறான உணவு:
அசைவம் உண்பது தவறானது என்றும் கெடுதலானது என்றும் இன்று மக்களிடையே ஓரளவு விழிப்புணர்வு உள்ளது. ஆனால் பால், முட்டை போன்ற உணவுகள் அதிக கால்சியம், புரதச்சத்துக்கள் கொண்ட ஒரு முழுமையான உணவு என்றும் அதை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து ஆங்கில மருத்துவர்களலால் பரவலாக கூறப்படுகிறது. மக்களும் அதை நம்பி, அவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதில் இரண்டு கருத்துக்களை சிந்தித்துப் பார்த்தால், சந்தேகமின்றி அவை தவறான உணவுகள் என புலப்படும்.
மாடுகள் பால் கறப்பது நமக்காக இல்லை. அவற்றின் கன்றுக்குட்டிகளுக்காகத்தான். மாட்டுப்பால், கன்றுக்குட்டியின் ஜீரண மற்றும் உடல் வளர்ச்சிக்கேற்றவாறான தன்மையையே கொண்டிருக்கிறது. கன்றுக்குட்டிக்கான பாலை, நாம் திருடி உண்பது நிச்ச்யம் இயற்கை அல்ல. குழந்தைகளுக்கு ஏற்றது மாட்டுப்பால் அல்ல. தாய்ப்பால்தான்.
மேலும் பாலில் இருப்பதாகக் கூறப்படும் கால்சியம், புரதச்சத்து மாட்டுக்கு எப்படி கிடைத்தது? இலை, தழைகளை உண்பதால் அவற்றுக்கு கிடைத்தது. நாமே அத்தகைய உணவுகளை நேரடியாக எடுத்துக் கொள்ளலாமே. குழந்தைகளுக்கு, பால் புகட்டுவதை நிறுத்தினால் சளி தொந்தரவுகள் குறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
இயற்கை உணவு உண்டால் பலம் குறைவு என்பவர்கள், யானையை சிந்தித்துப் பார்க்க வேண்டும். யானை யாருடைய பாலையும் திருடி உண்பதில்லை. முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடுவதில்லை. சைவ உணவுகளுக்கு தள்ளும் சக்தி (Pulling Strength) உண்டு. அசைவ உணவுகளுக்கு கொல்லும் தன்மைதான்(killing strength) உண்டு. மனிதன் போரினால், தனது இனத்தையே அழித்துக் கொண்டிருக்கும் முட்டாளாக வாழ்ந்து வருகிறான்.
இயற்கை உணவு எவ்வாறு செயல்படுகிறது?
சைவ உனவு வேறு, இயற்கை உணவு வேறு என்பதை நாம் முதலில் உணர வேண்டும். சைவ உணவு என்பது செடி, கொடி, மரங்களிடம் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை அடுப்பிலேற்றி சமைத்து உண்பது. சமைக்கும் போது உணவு செத்துவிடுகின்றது. உயிராற்றல் இழந்த உணவுகளை உண்பதாலேயே, நாமும் அல்ப ஆயுளில் போய் விடுகிறோம்.. வீதிக்கொரு மருத்துவமனை, சந்துக்கொரு மருந்துக் கடை என பெருகி வருகிறது. இதில் சிலர், பால் மற்றும் முட்டையையும் சைவ உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இவை அனைத்தும் உணவுகளே இல்லை. இயற்கை உணவு என்பது, இயற்கை அன்னை தரும் பழங்களும் கொட்டை பருப்புகளுமே. நாமாக எந்த மாறுதலும் செய்யாமல் அப்படியே நன்றாக மென்று சாப்பிடுவது தான் சிறந்த உணவு.
ஒரு சுத்தமான சக்தி நம் உடலில் சேரும்போது நம் உடல் தூய்மை அடைந்து அழுக்குகள் வெளியேறுகிறது. அந்த சுத்த சக்தி என்பது வெயில், மழை, பழங்கள், பச்சை தண்ணீர் என பல விதங்களில் நமக்கு கிடைக்கிறது. மழையில் நனைந்தால் சளி பிடிப்பது, வெளியில் சென்றால் தலை வலிப்பது, பச்சை தண்ணீர் குடித்தால் காய்ச்சல் வருவது, பழங்கள் உண்டால் வயிற்றலைச்சல், வாந்தி, சளி பிடிப்பது ஆகியன கழிவுகள் வெளியேற்றமே ஆகும். இயற்கை உணவு உண்ணும்போது இத்தகைய குறிகள் தோன்றினால், நாம் மகிழ்ச்சியடையவே வேண்டும். மருத்துவ மனைக்குச் செல்லவேண்டியதில்லை. இதற்கு மருத்து சாப்பிட்டால், கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கி விடும். இயற்கை உணவு உண்டால், நோய்கள் முதலில் குணமடைய ஆரம்பிக்கும். பிறகு மனநிலையும் சிறிது சிறிதாக மாற்றம் அடையும். கோபம், காமம், பொறாமை போன்ற தீய குணங்கள் மறைந்து அன்பு, காதல், சகிப்புத்தன்மை போன்ற நல்ல குணங்கள் வளர ஆரம்பிக்கும்.
ஒவ்வொருவரும் இயற்கை உணவிற்கு மாறினால் நாளை உலகம் எப்படி மாறும் என்பதை நாம் எண்ணிப்பார்க்கலாம். பெறுபவர்களை விட கொடுப்பவர்கள் அதிகமானால், உலகில் துன்பமேது.
இயற்கை உணவுக்கு மாறுவது எப்படி?
முழு இயற்கை உணவை உண்டு இன்னும் நம்மில் பெரும்பாலோனோர் பழகவில்லை. எனவே, தீராத வியாதிகள் வந்து உயிருக்கு போராடுபவர்கள் மட்டும், எடுத்த எடுப்பில் முழு இயற்கை உணவுக்கு மாறவேண்டும்.
மற்றவர்கள் சிறிது சிறிதாக ஆரம்பிக்க வேண்டும். நம்மிடம் உள்ள காபி, டீ குடிப்பது, பீடி சிகரெட் குடி, போதை போன்ற பழக்கங்கள் நம்மிடம் சிறிது காலம் மட்டுமே உள்ளவை. அவற்றை மாற்றவே பெரிதும் சிரமப்படுகிறோம். ஆனால் மனிதன் சமைத்துண்ணும் பழக்கத்தை ஆரம்பித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டது. எனவே அவை நம் உடலில் பழக்கமாக பதிந்து விட்டது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை வரும் போது, சமைத்துண்ணும் பழக்கம் வழிவழியாக வந்த ஒன்றாகும். எனவே இதை மாற்ற மிகுந்த தெளிவும் மன வலிமையும் வேண்டும். முதலில் ஒரு வேளை உண்ணலாம். பிறகு சிறிது சிறிதாக இயற்கை உணவை அதிகரித்து சமையலுணவை குறைத்து, இயற்கை உணவுக்கு மாற வேண்டும்.
சமையலுணவின் மேல் ஏக்கம் ஏற்படவே செய்யும். அதிலிருந்து மீண்டு வர யோகா, தியானம், மூச்சு பயிற்சி மற்றும் அக்கு பிரஷர் போன்றன உதவும். இவை யாவும் ஒன்றுக்குகொன்று உதவும் தன்மையன. இயற்கை உணவு, யோகா, தியானத்திற்கு தேவையான மன ஒருமைப்பாட்டையும் உடல் நெகிழ்வு தன்மையையும்(Flexibility) தரும். யோகா மற்றும் தியானம் சமையலுணவின் மேல் ஏக்கம் வராமல் இருக்க உதவும். மன வளக்கலை மன்றங்களில் சொல்லித்தரப்படும் எளிய முறை உடற்பயிற்சிகள் மிகுந்த பயனளிப்பனவாக உள்ளன. முன்பு குறிப்பிட்ட உணவு அட்டவணையில் உள்ள உணவில் கீழிருந்து மேலாக நாம் ஒவ்வொரு உணவையும் விட முயல வேண்டும்.
இயற்கை உணவு அதிக செலவு பிடிக்குமா?
இயற்கை உணவை உண்ணுங்கள் என்று யாருக்கேனும் சொன்னால், அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, அதிக செலவாகுமா? என்பதேயாகும். “வெளி விதி” எனப்படும் space Law என்ன சொல்கிறதென்றால், எங்கு என்ன பொருள் கிடைக்குமோ, அங்கு அதை சாப்பிடவேண்டும். மனிதர்களைத்தவிர வேறு எந்த மிருகமும் உணவை இறக்குமதி செய்வதில்லை. அவை வாழும் பகுதியிலேயே கிடைக்கும் உணவை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறது. நாமும் அதையே பின்பற்றலாம். நம் நாட்டில் சகாய விலைக்கு கிடைக்கும் தேங்காயும், வாழைப்பழமுமே முழுமையான இயற்கை உணவாகும். மற்ற பழங்களை அவரவர் வசதிற்கேற்ப வாங்கி உண்ணலாம்.
இயற்கை உணவுக்கு மாறிவிட்டால், பால், சர்க்கரை, அரிசி, மளிகைப்பொருட்கள், காப்பி, டீ தூள், கேஸ் தேவை இருக்காது. முக்கியமாக மருந்து செலவு குறைகிறது. சிறிது நாட்களில் மருந்தின் தேவை இல்லாமலேயே போகிறது. மன நிலையில் நல்ல மாற்றங்கள் வந்து ஆடம்பர மோகம் குறைந்து, எளிமையான வாழ்வையே மனம் விரும்புகிறது. மேலும் எண்ணைய், சோப்பு, அலங்கார பொருட்கள், ஷாம்பு, கிரீம் போன்றன நாளடைவில் தேவையில்லாமல் போகிறது. சருமம் இயற்கையாகவே பொலிவடைந்து விட்டால், அழகு சாதனப் பொருட்கள் தேவையில்லையே.
இயற்கை உணவை தயார்செய்வது மிகவும் எளிமையான செயலாகும். சமைக்கும் நேரத்தில் கால் பங்கு நேரம் கூட தேவையில்லை. கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் குடும்பங்களில், காலை நேர போராட்டம் முற்றாக மாறிவிடும். சமைத்துண்ணும் உணவை விட, இயற்கை உணவுக்கு செலவு குறைவுதான் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள இயலும்.
ஜீவ காருண்யம்:
இறந்த விலங்குகளை உண்டு, மொபைல் சுடுகாடாக நம் உடலை மாற்றிக் கொண்டுள்ள நிலையில், ஜீவ காருண்யம் என்பது சிரிப்பையே வரவழைக்கும். ஆனால் இன்று செடி கொடிகளுக்கும் உயிரும், உணர்ச்சியும் உள்ளது என்பது விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் பழ உணவை உண்ணூம் போது எந்த மரத்தையும் அழிப்பதில்லை. கீரைக்காகக் கூட நாம் அந்த செடியையே அழிக்கிறோம். ஆனால் பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி இயற்கையன்னை நமக்கு தரும் பழங்களை நாம் உண்ண, நாம் அந்த மரத்தை அழிக்க வேண்டியதில்லை. மேலும் நாமும் உண்டுவிட்டு எறியும் கொட்டையினால் ஒரு உயிர் உருவாகிறது. ஆனால் நாம் சமைத்துண்ணும் போது நாம் மூச்சு விட உபயோக்கும் போது ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடாக மாறி சுற்றுச்சூழலை கெடுப்பதுடன் காற்றில் நம் கண்களுக்கு தெரியாமல் உள்ள எண்ணிலா உயிரினங்களை அழிக்கிறோம். எனவே உண்மையான வள்ளலாரின் ஜீவ காருண்யம் நாம் பழ உணவை உண்பதிலேயே உள்ளது.